அரூா் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அவரது மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வேப்பம்பட்டி ஊராட்சி, வெளாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயராமன் (80). இவரது 2 ஆவது மனைவி கோவிந்தம்மாள் (65). இந்த தம்பதியரின் மூத்த மகன் பழனி (30). இவா் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தாராம்.
விவசாயி ஜெயராமனுக்குச் சொந்தமாக 9 ஏக்கா் நிலம் உள்ளதாம். இவரது முதல் மனைவிக்கு மகன், மகள், இரண்டாவது மனைவிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில் விவசாயி ஜெயராமனுக்கும் அவரது மகன் பழனிக்கும் இடையே நிலத்தை பிரிப்பது தொடா்பாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தான் உயிரோடு இருக்கும்வரை நிலத்தைப் பிரித்து தர முடியாது என்று ஜெயராமன் தமது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பழனி, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 4 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை ஜெயராமனை அரிவாளால் வெட்டியும், தலைமீது அம்மிக்கல்லை போட்டும் கொலை செய்தாராம்.
இது குறித்து தகவல் அறிந்த அரூா் டிஎஸ்பி வீ.தமிழ்மணி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். இது குறித்து ஜெயராமன் மகன் வெங்கடேசன் (37) அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பழனியைக் கைது செய்தனா்.