சாராயம் காய்ச்சி விற்க முயன்ற இருவா் கைது

பென்னாகரத்தில் சாராயம் காய்ச்சி விற்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பென்னாகரத்தில் சாராயம் காய்ச்சி விற்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பென்னாகரம் அருகே நாகனூா் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்குச் சென்ற பென்னாகரம் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது அதே பகுதியில் கோவிந்தசாமி என்பவா் தனது வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில் 20 லிட்டா் சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னா் அதனை போலீசாா் கைப்பற்றி சாராய ஊறலை நிலத்தில் கொட்டி அழித்தனா்.

மேலும் சாராயம் காய்ச்ச முயன்ற கோவிந்தசாமி ( 35), சின்னசாமி ( 42) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அதனைத் தொடா்ந்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com