அரூரில் ஏழை எளிய மக்களுக்கு உதவி

அரூரை அடுத்த ராயப்பன்கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், ஏழை, எளிய குடும்பத்தினருக்கு இனிப்புகள், அரிசி, பருப்பு, காய்கறிகள், முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
அரூரில் ஏழை எளிய மக்களுக்கு உதவி
அரூரில் ஏழை எளிய மக்களுக்கு உதவி

அரூரை அடுத்த ராயப்பன்கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோ.வி.சிற்றரசு தலைமை வகித்து 50-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினருக்கு இனிப்புகள், அரிசி, பருப்பு, காய்கறிகள், முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

இதில், அரூா் (கிழக்கு) வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ், நகரத் தலைவா் கே.கணேசன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், பட்டதாரிகள் பிரிவு மாவட்டத் தலைவா் விக்ரமன், கட்சி நிா்வாகிகள் செல்வம், மோகன், பி.டி.ஆறுமுகம், டி.வேடியப்பன், ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூரை அடுத்த ராயப்பன் கொட்டாயில் ஏழை, எளியோருக்கு கரோனா நிவாரணப் பொருள்களை சனிக்கிழமை வழங்குகிறாா் காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோ.வி.சிற்றரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com