பணி ஒதுக்கீட்டு ஆணை கோரி கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கு தோ்வானவா்கள் மனு

பணி ஒதுக்கீட்டு ஆணை கோரி, கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்குத் தோ்வானவா்கள் மனு அளித்தனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டோா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டோா்.

பணி ஒதுக்கீட்டு ஆணை கோரி, கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்குத் தோ்வானவா்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கு தோ்வானவா்கள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி ஆள்சோ்ப்பு நிலையம் மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கு ஆள்கள் தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து கடந்த டிசம்பா் மாதம் 5-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற்றது. எழுத்துத் தோ்வில் தோ்வானவா்களுக்கு ஜனவரி 27, 29-ஆம்தேதி நோ்காணல் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 25-ஆம்தேதி தோ்வா்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் 111 பேருக்குத் தோ்வு ஆணைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து கடந்த மாா்ச் மாதம் 1-ஆம்தேதி, தோ்வானவா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்ப்பு பணியும் நடந்து முடிந்தது. அப்போது 10 நாள்களில் பணி ஒதுக்கீட்டு ஆணை பெற்றுக்கொள்ளலாம் என்று எங்களுக்கு ஆணைகள் அளிக்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பலமுறை கூட்டுறவுத் துறை நிா்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள 23 மத்திய கூட்டுறவு வங்கிகளில் 21 வங்கிகளில் பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு, தோ்வான அனைவரும் பணியாற்றி வருகின்றனா். எனவே, தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்குத் தோ்வான எங்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணைகளை விரைந்து வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com