இன்று தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் தேரோட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலையில் தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.

அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலையில் தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டம், அரூா்-கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம்கால பூஜைக்காக தீா்த்தகிரி மலை (தீா்த்தமலை) மீது அம்பு எய்தி, தீா்த்தம் உண்டாக்கி அந்த தீா்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தாா். அந்த தீா்த்தமே தீா்த்தமலையிலுள்ள ராமா் தீா்த்தமாகும். ஸ்ரீ ராமா், பாா்வதி தேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவா்ஆகியோா் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும்.

தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருத்தலமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த திருக்கோயில் மாசிமகத் தேரோட்டம் பிப். 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு கட்டளைதாரா்கள், உபயதாரா்கள் சாா்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மாசிமகத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு அரூா் வட்டாரப் பகுதிகளுக்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com