தருமபுரி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை தருமபுரி வருகை தர உள்ளாா்.
இதுகுறித்து அக் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலா் ஏ.குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை மாவட்டக் குழுக்கள் சாா்பில், தருமபுரி வள்ளலாா் திடலில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தோ்தல் பிராசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி பங்கேற்று உரையாற்றுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.