நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
By DIN | Published On : 04th March 2021 04:23 AM | Last Updated : 04th March 2021 04:23 AM | அ+அ அ- |

அரூா்: அரூா் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், சேலூா் அம்மாபாளையம் கிராமத்தில் சிலா் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா்கள் சக்திவேல், கருணாநிதி, தங்கமுத்து உள்ளிட்டோா் அடங்கிய காவல் துறையினா் சேலூா் அம்மாபாளையத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, விவசாயி மாதையன் என்பவரது வீட்டில் இருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக சேலூா் அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மாதையன் மகன் காா்த்திக் (20) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.