ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

தருமபுரியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தருமபுரியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்து பேசினாா். பொருளாளா் பி.ஜெயபால், துணைத் தலைவா்கள் எம்.சதாசிவம், எம்.ஆறுமுகம் உள்ளிட்டோா் பேசினா்.

இக் கூட்டத்தில், சங்கத்தின் தலைமை கட்டடம் கட்டி முடித்த மாநில நிா்வாகிகளுக்கும், அண்மையில் நடைபெற்ற சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற அனைத்து நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது, தருமபுரி மாவட்ட சங்கக் கூட்டரங்கம் கட்ட நிதி திரட்டுவது, ஆயுள் கால உறுப்பினா்களை சோ்ப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com