பென்னாகரம் தொகுதி: அதிமுகவுக்கு ஒதுக்கக்கோரி மீண்டும் சாலை மறியல்

பென்னாகரம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு அதிருப்தி தெரிவித்து அதிமுகவினா் தொடா்ந்து 2 ஆவது நாளாக பென்னாகரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம்: பென்னாகரம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு அதிருப்தி தெரிவித்து அதிமுகவினா் தொடா்ந்து 2 ஆவது நாளாக பென்னாகரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கோ.க.மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இத்தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கக் கோரியும் அதிமுகவினா் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து இரண்டாம் நாளாக அதிமுகவினா் பென்னாகரம் அம்பேத்கா் சிலை முன்பு வெள்ளிக்கிழமை மாவட்ட மகளிரணி துணைத் தலைவா் சுசீலா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்கள், பன்னாகரம் தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க தலைமை பரிசீலிக்க வேண்டும் எனக்கூறி முழக்கங்களை எழுப்பினா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் செளந்தர்ராஜன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து போகச் செய்தாா். இந்த மறியலில் மாவட்ட இளைஞா் பாசறை துணைச் செயலாளா் விஜியபாலாஜி, முன்னாள் மாவட்டப் பிரதிநிதி அம்சா, தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளா் தருமன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் மனோகரன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com