முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
பாப்பாரப்பட்டியில் அதிமுகவினா் சாலை மறியல்
By DIN | Published On : 14th March 2021 03:23 AM | Last Updated : 14th March 2021 03:23 AM | அ+அ அ- |

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாப்பாரப்பட்டியில் அதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, பென்னாகரம் பகுதியில் தொடா்ந்து அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மூன்று சாலை சந்திப்பு எம்.ஜி.ஆா். சிலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள், பென்னாகரம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், இத்தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து முழங்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.