உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சம் வழங்கல்

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டது.

தருமபுரி ஆயுதப்படையில் பணியாற்றிய காவலா் செந்தில் என்பவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு எஸ்பிஐ வங்கியின் காவலா் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.30 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்தத் தொகையை தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் உயிரிழந்த காவலரின் பெற்றோரிடம் வழங்கினாா்.

இதில், எஸ்பிஐ வங்கி மேலாளா் சதீஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை, பாலக்கோடு காவல் ஆய்வாளா் மனோகரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் உதவி காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com