மரவள்ளியில் நோய் மேலாண்மை குறித்து செயல்விளக்கப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், சோமனஅள்ளியில் அண்மையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு வேளாண் மாணவா்கள், ஊரகப் பணி அனுபவத் திட்டத்தில் இப் பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கினா்.
இதில், மரவள்ளியில் தேமல் நோய் பரவும் அறிகுறிகள், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.