உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சம் பறிமுதல்

பென்னாகரம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பென்னாகரம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல்லை அடுத்துள்ள ஆலாம்பாடி பகுதியில் வருவாய்த் துறை தனி வட்டாட்சியா் மனோகரன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படை குழுவினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொன்முடி என்பவா் சிறிய கனரக வாகனத்தில் ஒகேனக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தாா். அந்த வாகனத்தை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் அளித்தனா். அதனைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் பென்னாகரம் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com