கோட்டப்பட்டி வட்டாரப் பகுதியில் திமுக கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாா் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிக்களூா், மந்திகுளாம்பட்டி, பெரியப்பட்டி, ஆவாலூா், சூரநத்தம், ஏ.கே.தண்டா, பையா்நாய்க்கன்பட்டி, மொண்டுகுழி, டி.ஆண்டியூா், வேடகட்டமடுவு, டி.அம்மாப்பேட்டை உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங் பகுதிகளில் ஓடும் கல்லாறுகளில் கூடுதல் தடுப்பணை அமைக்க பாடுபடுவேன் என்றாா்.
அரூரை அடுத்த கோட்டப்பட்டியில் வியாழக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாா்.