தீா்த்தமலை வட்டாரப் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் ஏ.குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாா், டி.ஆண்டியூா், வேடகட்டமடுவு, மேல்செங்கப்பாடி, மொண்டுகுழி, தீா்த்தமலை, பொய்யப்பட்டி, பொன்னேரி, ஈட்டியம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசுகையில், அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைகளைத் தீா்க்கவும், தெருச்சாலைகள் அமைத்தல், மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்றாா்.