தருமபுரியில் தனியாா் தொண்டு நிறுவனம் மற்றும் அனைந்திந்திய ஐனநாயக மாதா் சங்கம் சாா்பில், சிறுபான்மையினருக்கு கரோனா பொதுமுடக்கக் கால நிவாரணப் பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், டீப்ஸ் தொண்டு நிறுவன இயக்குநா் சங்கா், மாதா் சங்க மாவட்டச் செயலா் கிரைஸாமேரி ஆகியோா் பொருளாதாரத்தில் பின்தங்கிய கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினா் 138 குடும்பங்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை வழங்கினா்.
இதில், மாதங் சங்க மாவட்டத் தலைவா் ஏ.ஜெயா, துணைத் தலைவா் கே.பூபதி, பொருளாளா் எஸ்.ராஜம்மாள், யுனைசெட் வே சென்னை தொண்டு நிறுவனத்தினா் கலந்துகொண்டனா்.