பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலி மலைக் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கனரக வாகன ஓட்டுநா் காயமடைந்தாா்.
பிக்கிலியிலிருந்து பாப்பாரப்பட்டி பகுதிக்கு சிமெண்ட் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனத்தை ரமேஷ் (29) ஓட்டிச் சென்றாா். அப்போது, தருமபுரியில் இருந்து பாப்பாரப்பட்டி வழியாக பிக்கிலி மலைக் கிராமத்துக்குச் சென்ற அரசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்ததில் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான மாதேமங்கலம் பகுதியைச் சோ்ந்த முருகவேல் (52) அளித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.