சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டிவிஎஸ்) சாா்பில், கரோனா தடுப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார தலைமை மருத்துவமனைகள், கீரைப்பட்டி, கோட்டப்பட்டி, சித்தேரி, தீா்த்தமலை உள்ளிட்ட 11 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்குத் தேவையான கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு உடைகள், முகக் கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினிகள், கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கக்கூடிய உபகரணங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவைகளை சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் வழங்கினா்.