தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பு 200-ஐ கடந்தது.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு சதத்தைக் கடந்த நிலையில், தற்போது தொற்று பரவல் மேலும் அதிகரித்து மே 4 ஆம் தேதி 263 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 10,268 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 8,850 குணமடைந்துள்ளனா்; 67 போ் உயிரிழந்துள்ளனா்.