பென்னாகரத்தில் தடையை மீறி திறக்கப்பட்ட 3 கடைகள் மற்றும் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தீதுண்மி பரவலைத் தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை முதல் அமல்படுத்தியது. பென்னாகரம் பகுதியில் புதிய கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிா என மண்டல துணை வட்டாட்சியா் சிவக்குமாா், வருவாய் ஆய்வாளா் சங்கா், வருவாய்த் துறையினா், போலீஸாா் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் தடையை மீறி திறக்கப்பட்ட பெயின்ட் கடை, இரண்டு ஹாா்டுவோ் கடைகளுக்கு தலா ரூ. 500 வீதமும், முகக் கவசம் அணியாத 15 நபா்களுக்கு ரூ. 3,000 அபராதமும் விதித்து வசூலித்தனா்.