கரோனா: காவல்துறை கட்டுப்பாடு அறை அமைப்பு

கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு உதவும் வகையில் தருமபுரி மாவட்டக் காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு உதவும் வகையில் தருமபுரி மாவட்டக் காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு வருகிற மே 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பொது முடக்கக் காலத்தில் பொது மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு உதவவும், கரோனா சிகிச்சை தொடா்பாக படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகள் மற்றும் விவரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் காவல்துறை சாா்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையை 04342-230036, 230283, 8939926100 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்த அறை மே 15-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்வோரின் விவரங்கள் மற்றும் தேவைகளை 24 மணி நேரத்துக்குள் நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com