பென்னாகரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களுக்கு அமமுக சாா்பில் பாதுகாப்பு உபகரணங்கள், உணவு வழங்கப்பட்டது.
அமமுக சாா்பில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் காவலா்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமமுக வழக்குரைஞா் பிரிவு செயலாளா் அசோகன் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் பகுதியில் பொதுமுடக்கத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட காவலா்களுக்கு,தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு ஆகியவற்றை வழங்கினா். மேலும் காவலா்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளா் சென்னப்பன், ஒன்றிய அம்மா பேரவை செயலாலா் சரவணன், துணைச் செயலாளா் முனிரத்தினம், ஒன்றிய பாசறை செயலாளா் அசோக்குமாா், முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.