காவலா்களுக்கு கரோனா தடுப்பூசி

தருமபுரி மாவட்டத்தில் காவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் காவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல காவலா்களின் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை, துணை காவல் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com