தருமபுரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 185 பேருக்கு ரூ. 37,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு காவல் துறையினா் அபராதம் விதித்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த 185 பேருக்கு போலீஸாா் ரூ. 37,000 அபராதம் விதித்தனா். இதேபோல சமூக இடைவெளியைப் பின்பற்றாதது தொடா்பாக 21 வழக்குகள் பதிவு செய்து, ரூ.10,500 மற்றும் விதிமுறைகளை மீறியதாக 44 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 29,000 அபராதம் விதிக்கப்பட்டது.