கரோனா தடுப்பூசி முகாம்

பென்னாகரம் அருகே கரோனா தொற்றுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே கரோனா தொற்றுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பிலியனூா் ஊராட்சிக்கு உள்பட்ட குள்ளனூா் கிராமத்தில் சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமுக்கு நாகரசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் ஜெயச்சந்திர பாபு தலைமை வகித்தாா்.

முகாமில், மருத்துவா்கள் டாா்லிங் நவீன், சுகாதார ஆய்வாளா்கள் செந்தில் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் ஆகியோா் கொண்ட மருத்துவ குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா். இதில் 62 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து தகுதி வாய்ந்த 41 நபா்களுக்கு தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com