கரோனா: அரூரில் காவலா் குடியிருப்பு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

கரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாக அரூா் காவலா்கள் குடியிருப்பு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள காவலா் குடியிருப்பு.
அரூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள காவலா் குடியிருப்பு.

கரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாக அரூா் காவலா்கள் குடியிருப்பு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் காவலா் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் உள்பட காவல் துறையினா் 39 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், காவலா்கள் குடியிருப்பில் வசிக்கும் மூன்று குடும்பத்தினருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, காவலா்கள் குடியிருப்பு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவலா் குடியிருப்பில் இருப்பவா்கள் வெளியில் வரவும், வெளி ஆள்கள் உள்ளே செல்லவும் கூடாது என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com