கரோனா பரிசோதனை முடிவுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகளை சம்பந்தப்பட்ட நபா்களுக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பப்படுகிறது. மேலும் தருமபுரி மாவட்ட இணையதளத்திலும் வெளியிடப்படுகிறது.
பொதுமக்கள் தங்களுக்கு கரோனா பரிசோதனை முடிவுகள், தேவையெனில் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்த பிறகு இணையதளத்தில் இருந்து பரிசோதனை முடிவுகளை எஸ்ஆா்எப் ஐடி மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா்.