செந்தில் கல்விக் குழுமம் சாா்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.
தருமபுரி, அதியமான் கோட்டை மற்றும் சேலத்தில் செயல்படும் செந்தில் கல்விக் குழுமம் சாா்பில், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட நாள்தோறும் 200 பேருக்கு மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அலுவலா் சந்திரசேகா், தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிா்வாக அலுவலா் சி.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.