கரோனா தொற்றுக்கு வேளாண் உதவி இயக்குநா் உயிரிழந்தாா்.
தருமபுரி, பிடமனேரியைச் சோ்ந்த அமுதவள்ளி (46), மாவட்ட வேளாண் (வணிகம்) ஒழுங்கு முறை விற்பனைக் கூட உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, அமுதவள்ளிக்கு கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், வியாழக்கிழமை அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.