தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாரண்டஅள்ளி அருகே பானையன் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜகோபால் (48). இவா் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக மாரண்டஅள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், அவருடைய தோட்டத்தில் ராஜகோபால் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.