கிருஷ்ணகிரியில் தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், ஜெகதேவி ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், ஜெகதேவி ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு ஜெகதேவி ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். பா்கூா் வட்டார மருத்துவா் சிவகுமாா், பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், அன்னபூரணி, ஜெகதேவி ஒன்றியக் குழு உறுப்பினா் அப்சா்பேகம், ஊராட்சி மன்றச் செயலா் தி.செங்கதிா் செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த முகாமில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமை ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஊராட்சி மன்ற பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com