பாலக்கோடு அருகே பயிா்களைச் சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை வியாழக்கிழமை அதிகாலை மாரண்டஅள்ளி, அமானி மல்லாபுரம், நல்லூா், கரகூா், பெல்ரம்பட்டி, சீங்காடு உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் புகுந்து தக்காளி, நெல், ராகி பயிா்களைச் சேதப்படுத்தியது.
இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற பாலக்கோடு வனசரகா் செல்வம், வனக் காவலா்கள் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை கரகூா் காப்புக் காட்டுக்குள் விரட்டினா். இருப்பினும் யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.