கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்திலுள்ள பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் அக். 6-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் அக். 6-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நலவாரிய உதவி இயக்குநா் கே.பி.இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து கட்டுமானத் தொழிலாளா்களின் உடல்நலத்தை பேணிகாக்கும் வகையில் தடுப்பூசி அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக, பதிவுபெற்ற, வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இரண்டு லட்சம் கரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வட்டார வாரியாக அக். 6-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், அக். 6-ஆம் தேதி நல்லம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அக். 7-ஆம் தேதி பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அக். 8-ஆம் தேதி காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அக். 9-ஆம் தேதி அரூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உறுப்பினா்களது ஆதாா் அட்டை நகல், செல்லிடப்பேசி எண்ணுடன் வருகை தருமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com