கடத்தூா் அருகே மின்சார வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகேயுள்ள சில்லாரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). இவா் தனது விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மின்சார வேலி அமைத்திருந்தாராம். இந்த நிலையில் அவரது விவசாயம் நிலம் வழியாக சென்ற தொழிலாளி முனுசாமி மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விவசாயி சுப்பிரமணியை கைது செய்தனா்.