தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை விநியோகிக்க வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாா்த்தீபன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி பேசினாா்.
இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி நகரில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை கைவிட்டு கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினா்கள் மாதேஷ், வடிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.