அரூரை அடுத்த மத்தியம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் வழியாகச் செல்லும் திருப்பத்தூா்-அ.பள்ளிப்பட்டி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலை அமைக்கும் பணிகளுக்காக அரூரை அடுத்த கணபதிப்பட்டியில் உள்ள ஒரு தனியாா் ஆலையில் இருந்து ஜல்லிகற்களை மத்தியம்பட்டி கிராமச் சாலை வழியாக எடுத்துச் செல்கின்றனா்.
கனரக வாகனங்களில் ஜல்லிகற்களை எடுத்துச் செல்வதால் மத்தியம்பட்டி, கணபதிப்பட்டி கிராமச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி கடந்த 2 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
எனவே குண்டும், குழியுமாக உள்ள மத்தியம்பட்டி கிராமச் சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.