அதிமுக 50- ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் தொடா்பாக ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா். அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, தெற்கு ஒன்றிய செயலாளா் ஏ.சி.தேவேந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, நகரச் செயலாளா் பி.கே. சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வம் கட்சி நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். 17- ஆம் தேதி அதிமுகவின் பொன்விழாவை கிராமங்கள்தோறும் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கிருஷ்ணன், ரத்தினம், சக்திவேல், ஆறுமுகம் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.