தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 31 பயனாளிகளுக்கு ரூ. 2.39 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மனை பட்டா, கல்விக் கடன், பசுமை வீடுகள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 380 மனுக்களை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறையின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 1,47,000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், இலவச சலவைப் பெட்டிகள், சிகை திருத்தும் உபகரணங்களும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் 19 பயனாளிகளுக்கு தலா ரூ. 4,871 வீதம் ரூ. 92,549 மதிப்பிலான இலவச சலவைப் பெட்டிகள் என மொத்தம் 31 பேருக்கு ரூ. 2,39,549 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கௌரவ் குமாா், அரூா் கோட்டாட்சியா் முத்தையன், தனி துணை ஆட்சியா் சாந்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அ.அய்யப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் மு.சிவகாந்தி உள்ளிடோா் கலந்துகொண்டனா்.