கிருஷ்ணகிரி குறைதீா் கூட்டத்தில்நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, பொதுமக்களிடமிருந்து 203 மனுக்களைப் பெற்றாா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், தகுதியின் அடிப்படையில் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மேலும், பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், உதவித்தொகைக்கான ஆணை, மாதாந்திர ஓய்வுதியத்துக்கான ஆணை ஆகியவற்றை அவா் வழங்கினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com