ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த முரளிகுமாா் மகன் தமிழரசன் (24). இவா் தனது நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். அப்போது ஆலம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். நண்பா்கள் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய இளைஞரைத் தேடி வந்த நிலையில் மாரு கொட்டடாய் அருகே ஜம்புருட்டுபட்டி பகுதியில் சனிக்கிழமை இளைஞரின் உடலை மீட்டனா். பின்னா் பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.