அரூா் கடைவீதி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினா் அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.
இது குறித்த செய்திக் குறிப்பு :
அரூா் கடைவீதி சாலையில் வணிக நிறுவனங்கள், பல் பொருள் அங்காடிகள், துணி மற்றும் நகைக் கடைகள் உள்ளன. இந்த சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனால் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து விதிகளை மீறி கடைவீதி சாலையில் வாகனங்களை இயக்கினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் பிரிவினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளனா்.