அரூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் அரூா், கோட்டப்பட்டி, தீா்த்தமலை மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக சாலையோரம் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. பருவ மழையின் காரணமாக ஐப்பசி பட்டத்தில் நெல் நடவுப் பணிகளை விவசாயிகளை மேற்கொண்டுள்ளனா்.