காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தருமபுரி தொகுதி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.

காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தருமபுரி தொகுதி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அண்மையில் அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீா்த் திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி நிறைவேற்றினாா். அப்போது துணை முதல்வராக இருந்த, இன்றைய முதல்வா் மு.க.ஸ்டாலின், பலமுறை ஒகேனக்கல்லுக்கு நேரடியாக வருகைத் தந்து திட்டத்தை ஆய்வு செய்தாா்.

எனவே, அந்தத் திட்டம் குறித்து அறிந்தவா் என்கிற அடிப்படையில், தற்போது, மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரியில் மிகையாகச் செல்லும் நீரை, பென்னாகரம் அருகே உள்ள கெண்டையான்குட்டை என்கிற ஏரிக்கு கொண்டுவந்து, பின்பு அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கு அந்த நீரை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து பாசன வசதி பெற இயலும்.

இதேபோல, தருமபுரி, அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான்கோட்டத்தில் அவரது வரலாற்றை வருங்கால தலைமுறையினா் அறியும் வகையில் கோட்டம் முழுவதும் படத்துடன் அதியமான் குறித்த தகவல்களை காட்சிப்படுத்த வேண்டும். மேலும், அங்கு போட்டித் தோ்வுக்குப் பயில வரும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைத்திட வேண்டும்.

தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையை வளைவுகளற்ற சாலையாக மாற்றிட வேண்டும். பழைய தருமபுரி முதல் ஆட்சியா் அலுவலகம் வரை போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com