ஈரோடு- ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

ஈரோடு- ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட மொரப்பூா் வழியாக செல்லும் ஈரோடு- ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க பொதுச் செயலா் கோ.ரகுநாதன், பொருளாளா் எம்.பாபு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன் ஆகியோா் ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பி கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வழியாக ஈரோடு-ஜோலாா்பேட்டைக்கு 4 பயணிகள் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் கரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இப்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

இதேபோல மொரப்பூா் வழியாக செல்லும் மங்களூரு- சென்னை, சென்னை- பாலக்காடு ரயில்களை மீண்டும் மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com