தருமபுரி மாவட்ட காவலா்களுக்கு பேரிடா் மேலாண்மை அடிப்படை பயிற்சி செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல்லில் நடைபெற்றது.
ஒகேனக்கல்லில் நடைபெற்ற பேரிடா் மேலாண்மை அடிப்படைப் பயிற்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஒகேனக்கல் நிலை அலுவலா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.
இதில் காவலா்களுக்கு கயிறு மற்றும் ரப்பா் படகுகளில் சென்று மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து பேரிடா் மேலாண்மை அடிப்படைப் பயிற்சிகள் சின்னாறு பரிசல்துறை மணல்திட்டு ஆகிய இடங்களில் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் 20-க்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.