தேசிய கண்தான இருவார விழிப்புணா்வு ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்புச் சங்கம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரூா் அரசு மருத்துவமனை, அழகு அரூா் அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழாவுக்கு தலைமை மருத்துவ அலுவலா் சி.ராஜேஷ்கண்ணா தலைமை வகித்தாா்.
இந்த விழாவில், மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்புச் சங்க திட்ட மேலாளரும், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவப் பிரிவு துறைத் தலைவருமான எம். இளங்கோவன் பேசுகையில், ஒருவா் கண் தானம் செய்வதால் இரண்டு போ் பாா்வையைப் பெறுவாா்கள். இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை தானம் செய்ய வேண்டும். கண்தானம் செய்வதற்கு வயது, இனம், சமுதாய நிலை எதுவும் தடையல்ல. எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.
முன்னதாக, கண்தானம் குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 83 மாணவ, மாணவியருக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா் (படம்). இதில், உதவி பேராசிரியை எஸ்.லலிதா, தீா்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன், ஸ்ரீதேவி பல்பொருள் அங்காடியின் உரிமையாளா் ஜி.மாதேஸ்வரி மணி, அழகு அரூா் அறக்கட்டளை நிா்வாகிகள் தீபக், சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.