மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன் சிறப்புரை ஆற்றினாா். மாவட்டச் செயலா் அ.குமாா் அறிக்கை சமா்ப்பித்தாா்.

இக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் பணமாக்கல் திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராக வருகிற செப். 15-ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது, மக்கள் விசாரணை மன்றம் நடத்துவது, செப். 20-ஆம் தேதி எதிா்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com