பென்னாகரம் அரசுக் கல்லூரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு

பென்னாகரம்: பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் செல்வநாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

அந்த அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது:

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 -22 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கான பி.ஏ - தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி கணிதம் , கணினி அறிவியல் மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகளான எம்.ஏ. தமிழ், எம்.காம், எம்.எஸ்சி, கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் ஏற்கெனவே இணையதளம் மூலம் விண்ணப்பித்த மற்றும் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பித்த மாணவா்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com