அனுமதியற்ற மதுக் கூடங்கள் மீது நடவடிக்கை

தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுக் கூடங்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சி.கேசவன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுக் கூடங்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சி.கேசவன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் மதுபானக் கடைகளுக்கு அருகே அனுமதியற்ற மதுக் கூடங்கள் இயங்கி வருவதைக் கண்டறிவதற்காக டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு வட்டார வாரியாக ஆய்வு செய்தனா். இதில் மதுபான கடைகளுக்கு அருகிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் தண்ணீா், டம்ளா், தின்பண்டங்கள் விற்பனை செய்வது, மது அருந்த அனுமதித்தது தொடா்பாக கிருஷ்ணாபுரம் கோவிந்தசாமி (45), சின்னபள்ளத்தூா் சின்னசாமி (37), ஏரியூா்- ராமதாஸ் நகா் செல்வம் (40) உள்பட 5 போ் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மாவட்டத்தில் உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், மதுக் கடைகளுக்கு அருகே அனுமதியற்ற மதுக் கூடம், பெட்டிக் கடைகளில் மது அருந்த அனுமதிப்பது தெரிய வந்தால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com