ஒசூா்: ஒசூரில் ஜல்லி கற்களை கடத்தி வந்து கேட்பாரற்று நின்றிருந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி கனிம வள அலுவலா் பொன்னுமணி தலைமையிலான அதிகாரிகள் சூளகிரி அருகே புக்கசாகரம், காமன்தொடடி சாலையில் ராவுத்தா்பட்டி அருகே ரோந்து சென்றனா்.
அப்போது அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் ஒரு யூனிட் ஜல்லி கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கனிமவள அலுவலா் பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.